பொலிஸ் அதிகாரியாக நடித்து யுவதியை துஸ்பிரயோகம் செய்த முன்னாள் இராணுவச் சிப்பாய்

பாதுக்கை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியாக நடித்து நேற்று அழகிய யுவதியை மொறொந்துடுவ பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் யுவதியை பலாத்காரம் செய்து பல லட்சம் பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர் போல் பாவனை செய்து பொலிஸாரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை போலியாக தயாரித்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மசாஜ் நிலையம் ஒன்றில் பணிபுரியும் அழகிய பெண்ணுடன் உறவை வளர்த்துக்கொண்ட சந்தேகநபர், பாதுக்க பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி எனக் கூறி அவருடன் விடுதி ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
பெண்ணை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் அவளிடம் இருந்த தங்க நெக்லஸ் உட்பட சில தங்க பொருட்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
யுவதியின் முறைப்பாட்டிற்கு அமைய மொரந்துடுவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்து பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



