வெளிநாடொன்றில் இலங்கையர் செய்யும் செயல்: ஆர்வமுடன் காண செல்லும் மக்கள்
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Dubai
#ice factory
Mayoorikka
1 year ago

துபாயில், சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் இலங்கையரான சிற்ப கலைஞர் குளிரூட்டப்பட்ட ஸ்டூடியோவில் இருந்தபடி ஐஸ் சிற்பங்களை வடித்து வருகிறார்.
இலங்கையைச் சேர்ந்த மார்க ரணசிங்க என்பவரே இவ்வாறு ஐஸ் சிற்பங்களை வடிவமைத்து வருகிறார்.
விசேட நிகழ்ச்சிகளில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் ஐஸ் சிற்பங்களை தனது ஸ்டூடியோவில் வைத்து வடிவமைத்து கொடுத்து வருகிறார்.
மைனஸ் டிகிரியில் குளிரூட்டப்பட்ட அறையில் குளிர்கால ஆடைகள் அணிந்தபடி அவர் ஐஸ் சிற்பம் வடிப்பதை காண பலரும் ஆர்வமுடன் அவரது ஸ்டூடியோவிற்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



