5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

#SriLanka #kandy #Ratnapura #Land_Slide
Prathees
1 year ago
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிலச்சரிவு முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 அந்த அறிவிப்பில் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு அம்பர் வர்ண எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

 இதன் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, இரத்தினபுரி, அஹெலியகொட மற்றும் கலவான ஆகிய பகுதிகளுக்கு அம்பர் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 மேலும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேசத்திற்கு அம்பர் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 மேலும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும், கேகாலை மற்றும் கண்டி காலி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 காலி மாவட்டத்தின் நாகொட, பத்தேகம மற்றும் எல்பிட்டிய பிரதேசங்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, பாலிந்தநுவர, வல்லவிட்ட மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 கண்டி மாவட்டத்தின் மலையகம் மற்றும் கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரணியகல, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, ருவன்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம, அலபத்த, கொலொன்ன, பல்மடுல்ல, கஹவத்த, கிரியெல்ல, கொடகவெல மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேசங்களுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இன்று (07) மாலை 4 மணி முதல் நாளை (08) மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!