தக்க சமயத்தில் இந்தியா G-20 மநாட்டை நடத்துகிறது - ரிஷி!
#India
#Lanka4
#Tamilnews
Thamilini
2 years ago
இந்தியா சரியான நேரத்தில் G-20 மாநாட்டினைத் தலைமையேற்றுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு எதிர்வரும் 9 மற்றும் 10 திகதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இம்மாநாடு குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனெக்கிடம் ஊடகமொன்று கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த அவர், இந்தியாவை பூர்வீகமாக கொண்டிருப்பதை குறித்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிரிக்கெட் பற்றிய விவாதத்தில் தான் அதிகம் அரசியல் செய்கிறோம். கிரிக்கெட் என்று வரும்போது எனது மகள்கள் இந்தியாவையும், கால்பந்து என்றால் இங்கிலாந்துக்கும் ஆதரவளிப்பார்கள் எனக் கூறியுள்ளார்.