புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய மகோற்சவத்திற்கான திகதிகள் அறிவிப்பு!

#SriLanka #Temple #Festival #Tamilnews #sri lanka tamil news #Punkudutivu
Mayoorikka
1 year ago
புங்குடுதீவு  கண்ணகி அம்மன் ஆலய மகோற்சவத்திற்கான திகதிகள் அறிவிப்பு!

புங்குடுதீவின் வரலாற்றுப்பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய 2024 ம் ஆண்டு மகோற்சவத்திற்கான திகதிகள் இன்று ஆலய நிர்வாகசபைத்தலைவர் திரு . செல்லையா யுகேந்திரன் அவர்களால் கண்ணகி அம்மன் ஆலய வாட்சப் (பகிரி) குழுமத்தில் அறியத்தரப்பட்டுள்ளது.

 அடுத்த ஆண்டுக்கான வேலையிடத்தில் விடுமுறை எடுப்பவர்களின் நலன்கருதி செப்டம்பர் -டிசம்பர் மாதத்திற்குள் 2024 ம் ஆண்டுக்கான விடுமுறை எழுதிக்கொடுக்கும் வெளிநாடுவாழ் பக்தகோடிகளின் நலன்கருதி துரிதகெதியில் வெளியிடப்பட்டுள்ளது.

 அதன்படி..!

 08.04.2024 பங்குனி 26 நாள் திங்கட்கிழமை சாந்தி 0

9.04.2024 பங்குனி 27 நாள் செவ்வாய்கிழமை கொடியேற்றம்

 21.04.2023 சித்திரை 08நாள் ஞாயிற்றுக்கிழமை வேட்டைத்திருவிழா

 22.04.2024 சித்திரை 09 நாள் திங்கட்கிழமை இரதோற்சபம்

 23.04.2024 சித்திரை 10 நாள் செவ்வாய்கிழமை தீர்த்தோற்சபம்

 24.04.2024 சித்திரை 11 நாள் புதன்கிழமை பூங்காவனம் 

 25 .04.2024 சித்திரை 12 நாள் வியாழக்கிழமை வயிரவர்மடை (வருடாந்தமகோற்சவம் நிறைவு)

 அன்பான கண்ணகி அம்மன் அடியார்களுக்கு.. அன்பான வேண்டுகோள்; அம்பிகை அடியார்களே..! மிகப்பிரமாண்டமாக இலங்காபுரி மண்ணில் அமையப்பெற்ற எமது ஆலயத்திற்கான நித்திய பூசைக்கான உபயத்தில் பங்கெடுத்து அதை பராமரிப்பதோடு மூன்று வேளை பூசை ஒழுங்காக நடைபெறவும் , வருடம் 365 நாட்களும் அன்னதானம் நடைபெறவும் .

 அம்பிகைக்கு நிரந்தரஅபிடேக ஆராதனைகள் நடைபெறவும் , உங்களாலும் உதவமுடியும் . 

 தற்போது பராமரிப்புக்குமட்டும் 12 பணியாளர்கள் அர்ச்சகர்கள் தவிர்த்து ஆலயபராமரிப்பு பணுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . காலை & மாலை இருவேளைகளிலும் மலசலகூடங்கள் துப்பரவு செய்யப்படுகின்றன. நித்திய பூஜையும் அன்னதானமும் ஒரு நாளுக்கான நித்திய பூஜையையும் அன்னதானத்தையும் அம்பிகை அடியார்கள் தம் சார்பாக மேற்கொள்ள முடியும்,

 அம்பிகை அடியார்கள் தமது அல்லது தமது குடும்பத்தினரின் பிறந்த தினத்தில் அல்லது திருமண நாளில் அல்லது தமது மூதாதையர்களின் திதி அல்லது நினைவு நாளில் நித்திய பூஜையை மேற்கொள்ளலாம், நீங்கள் நித்திய பூஜைக்கு உபயம் செய்யும் தினத்தில் மூன்று வேளையும் அம்பிகைக்கு பூஜைகள் நடைபெற்று அம்பிகையின் பாதார விந்தங்களில் உங்கள் பெயர் நட்சத்திரம் சங்கல்ப்ம் செய்யப்பட்டு அர்ச்சனைக்கான விபூதி பிரசாதங்கள் உங்களுக்கு தபால் மூலம் வெளிநாடு / உள்நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

மேலும் உங்கள் சார்பாக அம்பிகை அடியார்களுக்கு அன்றைய தினம் மதியம் அன்னதானமும் விசேடமாக வழங்கப்படும் எனவே நித்திய பூஜை செய்ய விரும்புகின்ற அம்பிகை அடியார்கள் ஆலய நிர்வாக சபையினரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்.

 நீவீர் எந்த ஆலயத்திற்குச் சென்று வழிபட்டாலும் குலதெய்வத்தின் அருளின்றி பிறதெய்வம் அருளாது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!