செக் குடியரசில் இருந்து இலங்கைக்கு வந்த அரியவகை உயிரினங்கள்!

#SriLanka #Birds #Tamilnews #sri lanka tamil news #Zoo #monkey #Animal
Mayoorikka
1 year ago
செக் குடியரசில் இருந்து இலங்கைக்கு வந்த அரியவகை உயிரினங்கள்!

செக் குடியரசின் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மூன்று "ஈமு" பறவைகளும் நான்கு "ரிங் டெயில் லெமூர்" குரங்குகளும் நேற்று இரவு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் இவை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த 4 மாத வயதுடைய "ஈமு" பறவைகள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட பறக்க முடியாத பறவைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளன.

 ரிங்-டெயில் லெமூர் என்பது மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு அழிந்துவரும் இனமாகும்.

 இரண்டு வயதுடைய இரண்டு ஆண் லெமூர் குரங்குகளும், 11 வயதுடைய இரண்டு பெண் லெமூர் குரங்குகளும் அவற்றுள் அடங்குவதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை பின்னவல வகொல்ல மிருகக்காட்சிசாலையில் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், அதே மிருகக்காட்சிசாலையில் பொது கண்காட்சிக்காக அவை வழங்கப்படவுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!