பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்ப்பது குறித்து வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
Dhushanthini K
1 year ago

2022/23 ஆம் கல்வியாண்டில் மொத்தமாக 45,000 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
விண்ணப்பங்களுடன் கூடிய கையேடுகள் அங்கீகரிக்கப்பட்ட புத்தகக் கடைகளில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



