வைத்தியரின் பொறுப்பற்ற செயலினால் சிக்கலில் நோயாளிகள்!

#SriLanka #Hospital #doctor #Lanka4
Dhushanthini K
1 year ago
வைத்தியரின் பொறுப்பற்ற செயலினால் சிக்கலில் நோயாளிகள்!

எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த மயக்க மருந்து ஆலோசகர் ஒருவர் முன்னறிவிப்பு இன்றி வைத்தியசாலையை விட்டு வெளியேறியமையினால், எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சிசேரியன் உள்ளிட்ட உயிர்காக்கும் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை (01) முதல் மயக்க மருந்து நிபுணர் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும், வைத்தியசாலை நிர்வாகம் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், திங்கட்கிழமை (04) தெரியாத எண் மூலம் மருத்துவமனையின் உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் செய்தி வந்ததாக அந்த வட்டாரம் தெரிவித்தது. கடிதம் வடிவில் செய்தி கிடைத்த நிலையில், ஆலோசகரின் பெற்றோர் மூலம் செய்தி அனுப்பப்பட்டது என்பதை உயர் அதிகாரிகள் அறிந்துள்ளனர். 

எவ்வாறாயினும் குறித்த வைத்திய நிபுணர்  வெளிநாடு சென்றாரா இல்லையா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன்காரணமாக ஐசியூ செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

மேலும், சிசேரியன் மற்றும் சிக்கலான சத்திரசிகிச்சைகள் போன்ற சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படவுள்ள நோயாளர்கள் மயக்க மருந்து நிபுணர்கள் இல்லாத காரணத்தினால் இரத்தினபுரி மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சுகாதார அமைச்சகத்திடம் தெரிவித்தும், இன்னும் பதிலளிக்கவில்லை எனவும், மாவட்ட பொது வைத்தியசாலை என்பதால் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு இரண்டு ஆலோசகர் மயக்க மருந்து நிபுணர்கள் தேவைப்பட்ட போதிலும், மூன்று மாதங்களாக ஆலோசகர் மயக்க மருந்து நிபுணர் பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் உயர் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!