கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று முதல் விவாதத்திற்கு

சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (06) பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று, நாளை (07ஆம் திகதி) மற்றும் நாளை மறுதினம் (08ஆம் திகதி) ஆகிய மூன்று நாட்களுக்கு விவாதம் நடைபெறவுள்ளதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இந்த பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
சுகாதாரத்துறை இதுவரை சீர்குலைந்துள்ள நிலையிலும், அரச வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகளினால் உயிரிழந்த பலரது குடும்ப உறுப்பினர்களும் இன்று இந்த விவாதத்தை பார்வையிடுவதற்காக பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சருக்கு எதிராக கையொப்பமிட்ட மக்கள் மனுவையும் சமகி ஜனபல வேகய பாராளுமன்றத்தில் கையளிக்கவுள்ளதாக கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் டொக்டர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
இதனை வெற்றிகொள்ள எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடைபெற்று வருவதால், ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.



