கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் மோசடி: பொறியாளர் உட்பட 4 பேர் சிக்கினர்

கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் மோசடி: பொறியாளர் உட்பட 4 பேர் சிக்கினர் கொழும்பு துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்த பாரிய எரிபொருள் மோசடி தொடர்பில் துறைமுக பொறியியலாளர், சாரதிகள் மற்றும் வெல்டர் ஒருவரை கொழும்பு கரையோர பொலிஸார் நேற்று முன்தினம்(04) கைது செய்துள்ளனர்.
சுமார் பத்தாயிரம் ரூபா பெறுமதியான சுமார் 3,300 லீற்றர் எரிபொருளை சந்தேகநபர்கள் மோசடியாகப் பெற்றுள்ளனர்.
அதன் பின்னர் அவ் எரிபொருளை தாங்களாகவே துறைமுகத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக கரையோரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதில், அவர்களின் தவறால் இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.
கொழும்பு துறைமுகப் பகுதியில் மழை நாட்களில் மக்கள் நடமாட்டம் இல்லை எனவும், ஒருகுடாவத்தையில் இருந்து பவுசர்களுக்கு எரிபொருள் நிரப்பி கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள பெரிய தாங்கிகளுக்கு டீசலை செலுத்தும் போது உரிய அதிகாரிகள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பப்பட்டதா எனச் சரிபார்க்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த எரிபொருள் கடத்தல் சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற போதிலும், சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.



