புங்குடுதீவில் குண்டும் குழியுமாக கிடந்த பிரதான வீதிகள் புனரமைக்கப்படுகின்றன

#SriLanka #Jaffna #government #Road #Punkudutivu
Prasu
1 year ago
புங்குடுதீவில் குண்டும் குழியுமாக கிடந்த பிரதான வீதிகள் புனரமைக்கப்படுகின்றன

கடந்த யூன் மாதம் 18 ம்திகதியில் இருந்து 25.06.2023 வரை நடைபெற்ற புங்குடுதீவின்வரலாற்றுப் பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய மஹா கும்பாபிசேகம் / குடமுழுக்கு விழா நடைபெற்றபோதும் அதுமுடிந்த பின்நாளிலும் அடியார்களின் நயினையம்பதி சென்று திரும்பிவரும் வெளிநாட்டு உள்நாட்டு பக்தர்கள் அனைவரும் இலங்கையில் பிரமாண்ட ஆலயம் பலகோடிரூபாய் செலவில் 500 தூண்களுடன் கட்டப்பட்ட ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு ஊர்திரும்பும் வேளையில் இவ்வளவு காசு செலவழித்து கோவில்கட்டிய இந்த ஊரவர்கள் வீதிகளை புனரமைக்காமல் விட்டு விட்டால்களே என அங்கலாய்ப்பவர்களும் எரிச்சலால் பரிகசிப்பவர்களும் இல்லாமலில்லை.! 


ஆனால் அடிப்படை அறிவார்ந்த மக்களுக்கு விளங்கும் அரசாங்கம் செய்யவேண்டிய வேலைகளை தனிநபர் பணக்காரர்கள் என்பதற்காக பெருந்தெருக்கள் திணைக்களத்தை கையில் எடுத்து இந்தியா போன்று பணிசெய்ய முடியாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும் . 

ஆனால் தற்போது யாரோ ஒரு புங்குடுதீவில் பிறந்த அரச உயர்மட்டத்தில் பணிபுரியும் புண்ணியவான் ஒருவனால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தால் இலங்கை அரசாங்கத்தின் முயற்சியில் இவ்வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றது! இனி மக்கள் சிறப்பாக பயணித்து கண்ணகித்தாயை மகிழ்வோடு வணங்கி மகிழலாம் .

மடத்துவெளித் துறைமுகத்தில் இருந்து புங்குடுதீவு கண்ணகி அம்மன் அலங்கார வளைவுஇரணைத்தெருவரை ஒரு குழுவும் , இரணைத்தெருவில் இருந்து சந்தையடிவரை ஒரு குழுவும் , சந்தையடியில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறைவரை ஒரு குழுவும் என துரிதகெதியில் வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

ஏனைய புங்குடுதீவின் பெருந்தெருக்கள் பகுதிகளும் , மற்றும் வங்களாவடியில் இருந்து வேலணை பழையதுறைவரையும் அத்தோடு வாணர்பாலமும்புனரமைப்புசெய்யப்படவுள்ளதாகவும் அறிகிறோம் 

இவ்வீதிகள் விரைந்து புனரமைக்கப்படும் என நம்புவோம் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!