பொருளாதார நெருக்கடி தொடர்பிலான நாடாளுமன்ற குழு பதவி விலகல்!
#SriLanka
#Parliament
#economy
Mayoorikka
1 year ago

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் நாடாளுமன்றத் துறை கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் குழுவொன்று அதிலிருந்து விலகியுள்ளது.
எஸ்.பி.திஸாநாயக்க, தம்மிக்க பெரேரா மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
இதன்படி, வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு நிமல் லான்சா, நாலக பண்டார கோட்டேகொட மற்றும் மஞ்சுள திஸாநாயக்க ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



