இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு உயிர் அச்சுறுத்தல்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
Dhushanthini K
1 year ago

பேஸ்புக் பதிவொன்றின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எப்பாவல, மெதியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இட்டுள்ள பேஸ்புக் பதிவில், “இந்த நாட்டை சீரழித்த நபர் நமது பகுதிக்கு வருகிறார். ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்றை பெற்றுக்கொள்ள முடியுமா?” என பதிவிட்டிருந்தார்.
வரும் வியாழக்கிழமை (07.09) எப்பாவல, மெதியாவ பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில், குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.



