கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : வெற்றிபெறும் முனைப்புடன் எதிர்கட்சி!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கவனம் செலுத்தியுள்ளனர்.
எதிர்கட்சி எம்.பி.க்கள் இந்த பிரேரணையை வெற்றிகொள்ள ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் விவாதிப்பது என அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும், இந்த பிரேரணையை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்கையில்லா நம்பிக்கையை தோற்கடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளதாக அறியமுடிகிறது.



