தேர்தல் நெருங்கினாலும் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க முடியாத நிலையில் மக்கள்!

#SriLanka #Election #Maithripala Sirisena #Lanka4
Dhushanthini K
1 year ago
தேர்தல் நெருங்கினாலும் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க முடியாத நிலையில் மக்கள்!

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும்.  எனினும், நாட்டின் 60% மக்கள் அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் தேர்வு செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு நிறைவு விழா நேற்று (03.09) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும். எனினும், நாட்டின் 60% மக்கள் அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் தேர்வு செய்யவில்லை. 

இலங்கை அரசியலில் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் முன்னிலை வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இந்த நாட்டிற்கு மூன்று ஜனாதிபதிகளையும் ஏழு பிரதமர்களையும் வாரி வழங்கியதன் மூலம் பாரிய பங்காற்றியுள்ளது.

இந்த அழகான மாலையில் இதுபோன்ற ஒரு ஆண்டு விழாவைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்த மகிழ்ச்சியை நீண்ட கால மகிழ்ச்சியாக மாற்ற முடியும்.

எம்மால் ஒரு மகிழ்ச்சியான அரசாங்கத்தை உருவாக்க முடியாவிட்டால், பல வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், இந்நாட்டின் பொது மக்களும் கஷ்டப்பட்டு கவலையடைய வேண்டிய நிலை உருவாகும்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!