இந்தியாவில் மின்னல் தாக்கத்தினால் 08 பேர் பலி!
#India
#Lanka4
Dhushanthini K
2 years ago

இந்தியாவின் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 04 நாட்களுக்கு இந்தியாவின், பல மாவட்டங்களில் மின்னல் விபத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அந்நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தவிர, அடுத்த 48 மணித்தியாலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும் என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



