நாவலப்பிட்டியில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
நாவலப்பிட்டி மஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (02.09) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய தடுப்பணையின் அஸ்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் உடல் மீது மண் மேடு சரிந்து விழுந்தததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
குறித்த நபர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி, வெரலுகசின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறுஉயிரிழந்துள்ளார்.