ஆசிரியரின் தாக்குதலால் மாணவன் மருத்துவமனையில்

வவுனியா நகரிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் காது மற்றும் கன்னத்தில் அடித்ததில் மாணவனின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் கசிந்து நேற்று முன்தினம் (31) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் வவுனியா பிராந்திய கல்வி பணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வவுனியா தெற்கு பிராந்திய கல்விப் பணிப்பாளர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இதுவரை குறித்த ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



