பொல்பிட்டிய நீர்த்தேக்கத்தின் நீரை சேமித்து வைக்க தீர்மானம்!
#SriLanka
#Lanka4
Dhushanthini K
1 year ago

பொல்பிட்டிய நீர்த்தேக்கத்தின் நீரை குடிநீர் தேவைக்காக தக்கவைக்க நீர் கட்டுப்பாட்டுச் செயலகக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குடிநீர் தேவைக்காக பொல்பிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் நீரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தக்கவைக்க அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் மழை பெய்யும் என்ற வானிலை முன்னறிவிப்பில் மாற்றம் செய்யப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
நுகர்வோருக்கு நீர் வழங்கும் 39 நீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாக 42 நீர் விநியோக அமைப்புகளும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.



