பாதாள உலக தலைவரின் மனைவியை காதலித்ததால் உயிர் இழந்த முச்சக்கரவண்டி சாரதி

கடந்த 28ஆம் திகதி வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் மொஹமட் சாஜஹான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் மற்றுமொருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறந்தவர் இந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
அவரிடம் நடத்திய விசாரணையின் பின்னர், மற்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் "புளூமெண்டல் ரவி" என்பவரின் போதைப்பொருள் கடத்தலின் நிதி நிர்வாகியாக செயற்படுபவர் இவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனையில் வசிக்கும் இவர் கொலைக்கு சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 17 இலட்சத்துக்கும் அதிகமான ரூபா, 9 நவீன கையடக்கத் தொலைபேசிகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரிடம் வெவ்வேறு வாகனங்களின் 21 வருவாய் உரிமங்கள் மற்றும் பத்து வெவ்வேறு வங்கி கணக்கு புத்தகங்கள் இருந்தன.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொலையுண்ட முச்சக்கரவண்டி சாரதி, பாதாள உலக தலைவரின் மனைவியுடன் கொண்டிருந்த தொடர்பை பழிவாங்கும் நோக்கில் இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 1ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இந்த சந்தேக நபர் கொலையுண்ட முச்சக்கரவண்டி சாரதியுடன் நட்பாக இருந்துள்ளார்.
டுபாயில் இருக்கும் புளுமண்டல் ரவியின் ஆலோசனையின் பேரில் முச்சக்கரவண்டி சாரதி வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவரை வெல்லம்பிட்டிக்கு அழைத்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.



