அரசாங்கத்திற்கு சொந்தமான 165 ஏக்கர் காணியை மீள ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு

அரசாங்கத்தின் காணி மீட்பு சட்டத்தின் கீழ், வனாத்தவில்லுவ வீரக்கொடி சோலை காப்புக்காடுக்கு சொந்தமான 165 ஏக்கர் காணியை வனப் பாதுகாவலர் நாயகத்திடம் உடனடியாக மீள ஒப்படைக்குமாறு புத்தளம் நீதவான் மிஹில் சத்துருசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சொந்தமான காணியை மீட்பதற்காக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு கன்சர்வேட்டர் ஜெனரல் சார்பில் புத்தளம் தள வன அதிகாரி விடுத்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டார்.
புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரக்கொடி சோலை காப்புக்காணி வெளியாட்களால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தள வன அதிகாரி புத்தளம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
வீரக்கொடி சோலை காப்புக்காடுக்கு சொந்தமான நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ள வெளியாட்களை அதிலிருந்து வெளியேற்றி, காப்புக்காட்டுக்கு சொந்தமான நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டது.
அரச காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் புத்தளம் தள அதிகாரியினால் வழங்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் நீண்டகால விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் நீதவான் மிஹில் சத்துருசிங்க, காப்புக்காடுகளை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள வெளியாட்களை காப்புக்காட்டில் இருந்து வெளியேற்றி உடனடியாக அதனை வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.



