பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 09 இராணுவத்தினர் பலி!
#world_news
#Pakistan
#Lanka4
Dhushanthini K
1 year ago

பாகிஸ்தானில் தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைக்குண்டு தாக்குதலில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (31.09) இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மேற்கு பகுதியில், தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், தனது மோட்டார் சைக்கிளை இராணுவ வாகனங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில், 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை எந்த குழு நடத்தியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.



