அத்துமீறிய புத்த விகாரைகளுக்கு திருகோணமலையில் இடமில்லை - செந்தில் தொண்டைமான் , சம்பந்தன் வாழ்த்து

#SriLanka #Trincomalee #Temple #Buddha #R.Sambanthan
Prasu
1 year ago
அத்துமீறிய புத்த விகாரைகளுக்கு திருகோணமலையில் இடமில்லை - செந்தில் தொண்டைமான் , சம்பந்தன் வாழ்த்து

திருகோணாமலை நிலாவெளி வீதியிலுள்ள தமிழ் கிராமமான இலுப்பைக்குளத்தில் விகாராதிபதிகள் சிலர் விகாரை ஒன்றை அமைக்க எடுத்துவந்த முயற்சியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தடுத்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுவொன்று கடந்த திங்கட்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கண்டி - கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குள் உட்புகுந்த தேரர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

இலுப்பைக்குளத்தில் பௌத்த விகாரை ஒன்றை நிர்மாணிக்க எடுத்துவரும் முயற்சிகள் தொடர்பில் பொதுமக்களால் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல் வாதியுமான இரா.சம்பந்தனுக்கு தொலைபேசி மற்றும் கடித மூலம் முறையிடப்பட்டிருந்தது.

இதற்கமைய சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு முற்றுமுழுதாக தமிழ் மக்கள் வாழும் இலுப்பைக்குளத்தில் விகாரை அமைப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

இதனையடுத்து நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டதுடன் மேற்படி விகாரை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட காணியின் உரிமையாளரும் மற்றும் பொதுமக்களும் தமது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்த நிலையில் விகாரை அமைக்கும் பணி இடை நிறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தேரர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை அணுகிய போதும் இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் அமைக்கப்படும் விகாரைக்கு அனுமதியை வழங்குவது சர்ச்சைக்குரிய விடயமென அவர் தேரர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அத்துடன், விகாரை அமைக்கும் முயற்சிக்கு மீண்டும் மறுப்புத் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே தேரர்கள் கடந்த திங்கட்கிழமை வீதியை மறித்தும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை தடுக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறியுள்ளதாவது, “இன முரண்பாட்டை தவிர்க்கும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த விடயத்தில் செயற்பட்டுள்ளார். 

அவரது செயற்பாடு பாராட்டத்தக்கது. தான் மறைந்த தலைவர் சௌமிமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவருடைய செயற்பாட்டை ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாட்டில் அறிய முடிகிறது“ என்றும் தெரிவித்துள்ளார். .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!