டைட்டானிக் கப்பலின் எச்சங்களை மீட்க திட்டமிடும் அமெரிக்க அரசு?

ஆழ்கடலில் மூழ்க்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் எச்சங்களை மீட்பதற்கு திட்டமிட்ட ஒரு பயணத்தை மேற்கொள்ள அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1912ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க்கிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்ட டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணித்த 1500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்றுவரை இது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நீரில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும், டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலும், அண்மையில் விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணித்த ஐவரும் உயிரழந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், டைட்டானிக் கப்பலின் எச்சங்களை மீட்க அமெரிக்க அரசு முயற்சிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பயணத்தை ஆர்எம்எஸ் டைட்டானிக் இன்க் (ஆர்எம்எஸ்டி) ஏற்பாடு செய்துள்ளது, இது ஜார்ஜியாவை தளமாகக் கொண்ட நிறுவனமாகும், இது உலகின் மிகவும் பிரபலமான கப்பல் விபத்துக்கான காப்புரிமையை கொண்டுள்ளது.
வடக்கு அட்லாண்டிக்கின் அடிப்பகுதியில் உள்ள தளத்திலிருந்து வெள்ளிப் பொருட்கள் முதல் டைட்டானிக்கின் மேலோட்டத்தின் ஒரு பகுதி வரை மீட்கப்பட்ட கலைப்பொருட்களை நிறுவனம் காட்சிப்படுத்துகிறது.
தற்போது நீருக்கடியில் புதைந்திருக்கின்ற டைட்டானிக் கப்பல் சிதைவடைந்து வருகின்ற நிலையில், அதன் எஞ்சிய பகுதிகளில் இருந்து தொல்பொருட்களை மீட்க நிறுவனம் முயற்சி செய்கிறது.



