நிலவின் வெப்பநிலையை ஆய்வை தொடங்கியது சந்திரயான் 3

#India #Moon #Robot #Tamilnews #Breakingnews #ImportantNews #Scientist #Space
Mani
2 years ago
நிலவின் வெப்பநிலையை ஆய்வை தொடங்கியது சந்திரயான் 3

சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடு குறித்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து, நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் என்றும் விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், விக்ரம் லேண்டரில் உள்ள நிலவின் மேற்பரப்பை பரிசோதிக்கும் கருவி அனுப்பிய முதல்நிலை "கிராப்"-ஐ இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் 10 செமீ வரை ஆய்வு செய்யும் திறன் கொண்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4