காலநிலை மாற்றத்தின் தாக்கம்: அண்டார்டிகாவில் பல்லாயிரக்கணக்கான பெங்குவின் குட்டிகள் மரணம்

கடும் வெப்பமான காலநிலை இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக வெளிநாட்டு ஊடகங்கள் மற்றுமொரு சோகமான செய்தியை வெளியிட்டிருந்தன.
அண்டார்டிக் கண்டத்தில் பத்தாயிரம் பெங்குவின் குட்டிகள் இறந்திருப்பதை இது காட்டுகிறது.
அண்டார்டிக் பனிக்கட்டிகள் உருகுவதே முக்கிய காரணம். பெங்குவின் குட்டிகள் முழு வளர்ச்சி அடைவதற்கு முன்பே இந்த சம்பவம் நடந்ததாகவும், பெங்குவின் குட்டிகள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்யும் போது இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது வரவிருக்கும் பேரழிவின் முன்னோடி என்று அழைக்கப்படலாம் என்று அண்டார்டிகாவின் ஆய்வில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் டாக்டர் பீட்டர் ஃப்ரீட்வெல் கூறினார்.
புவி வெப்பமடைதல் காரணமாக அண்டார்டிக் தீபகற்பத்தில் இருந்து பனி உருகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பென்குயின் காலனிகள் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.



