நேபாளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய யாத்ரீகர்கள் உள்பட 7 பேர் பலி
#India
#Death
#Accident
#Bus
#Nepal
Prasu
1 year ago

நேபாளத்தில் உள்ள பாரா மாவட்டத்தில் காத்மாண்டில் இருந்து ஜனக்பூருக்கு இந்தியாவைச் சேர்ந்த யாத்ரீகர்கள், டிரைவர், உதவியாளர் உள்பட 27 பேருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்து சூரியாமாய் கோவில் அருகே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 இந்தியர்கள் உள்பட 7 பேர் பரிதாபாக உயிரிழந்தனர். 19 பேர் காயத்துடன் உயிர்தப்பினர். உயிரிழந்த 6 இந்தியர்களும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.



