சுகாதார சீர்கேடு குறித்து மனித உரிமை பேரவையில் எடுத்துக்கூற நடவடிக்கை!
#SriLanka
#Health
#Lanka4
#Human Rights
Thamilini
2 years ago
நாட்டின் தற்போதைய சுகாதார சீர்கேடு குறித்து "ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்" மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இன்று(22.08) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணியகத்திற்குச் சென்றுள்ளனர்.
இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையின் சுகாதாரத்துறை தற்போது எதிர்கொண்டுள்ள சீர்கேடு குறித்து எடுத்துக்கூற எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.