கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு
#world_news
#Earthquake
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Colombia
Mani
2 years ago

நேற்று கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் பொகோட்டா, மெடலின் மற்றும் காலி போன்ற பெரிய நகரங்களிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த குறிப்பிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.



