ரஷ்ய எல்லையை கடக்க முயன்ற உக்ரைன் வீரர்கள் 4 பேர் சுட்டுக்கொலை
#India
#world_news
#Attack
#Russia
#Ukraine
#War
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Russia Ukraine
Mani
2 years ago

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
வடக்கு உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் நுழைய முயன்றபோது நான்கு உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ரஷ்ய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறுகையில், "உக்ரைனிய நாசவேலை மற்றும் உளவுக்குழுவின் 6 பேர் பிரையன்ஸ்க்குள் நுழையும் முயற்சி முறியடிக்கப்பட்டது" என்றார்.



