சோமாலியாவில் 23 பயங்கரவாதிகளை துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்ற ராணுவம்
#India
#Death
#world_news
#Attack
#Somalia
#Terrorist
#2023
#Tamilnews
#Died
#Killed
Mani
2 years ago

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதையடுத்து, அவர்களை ஒழிக்க ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வளைகுடா பகுதியான புலா-புலே அருகே இந்த ரோந்துப் பணிகளில் ஒன்றில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு சுற்றி வளைத்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அல்-ஷபாப் அமைப்பை சேர்ந்த 23 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
அதன்பிறகு வெடிகுண்டு, கைத்துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு அவர்களது முகாம்களை அழித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.



