கொத்துக் குண்டுகள் மூலம் டொனெட்ஸ்க் பகுதியில் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

#Attack #Russia #Missile #Ukraine #War
Prasu
2 years ago
கொத்துக் குண்டுகள் மூலம் டொனெட்ஸ்க் பகுதியில் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

உக்ரைன்- ரஷியா இடையிலான போரில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ராணுவ உதவி பெற்று உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.

அடிக்கடி ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வாறு நடத்தும்போதெல்லாம், ரஷியா பதிலடியாக ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது. 

கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு ஏவுகணை தாக்குலை ரஷியா நடத்தியது. அதில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. மீட்புப்படையினர் இடிபாடுகளை நீக்கியபோது, ஆறு பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் உக்ரைனிடம் இருந்து டொனெட்ஸ்க் கைப்பற்றிய ரஷியா, தனது பகுதியாக அறிவித்துள்ளது. 

இந்த பிராந்தியத்தின் மாகிவ்கா பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதுவும் அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகள் மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4