கெஹலிய மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த இறுதி தீர்மானம்!
#SriLanka
#Keheliya Rambukwella
#Lanka4
Thamilini
2 years ago
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் முதல் பாராளுமன்ற அமர்வில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (11.08) கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வுகளில் மூன்று நாட்கள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.