748 மில்லியன் ரூபாய் பெறுமதியான போலி சிகரெட்டுகள் அழிப்பு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
கொட்டாஞ்சேனையில் உள்ள இலங்கை புகையிலை கம்பனி (CTC) வளாகத்தில் 748 மில்லியன் ரூபா பெறுமதியான கடத்தல் போலி சிகரெட்டுகளை இலங்கை சுங்கம் நேற்று (10.08) அழித்துள்ளது.
அத்துடன் கடந்த ஜுன் மாதம் 22 ஆம் திகதி துபாயிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற 40 அடி கொள்கலனை சுங்க வருவாய் பணிக்குழு (RTF) அதிகாரிகள் கைப்பற்றினர்.
பொய்யான ஆவணங்களின் கீழ் ராகமவில் உள்ள சரக்குதாரர் ஒருவருக்கு இந்த சரக்கு அனுப்பப்பட்டதுடன், அதில் 9,940,000 வெளிநாட்டு சிகரெட்டுகளான ‘மடடோர்’ குச்சிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 78 மில்லியன் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.