தனியார் துறைகளை உள்ளடக்கி விவசாயத்தினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை உள்ளடக்கி விவசாயம், பெருந்தோட்ட, நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களை இணைத்து செயலணி ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்காக இந்த செயலணி உருவாக்கப்படவுள்ளது.
9 மாகாண சபைகளின் வளங்களைக் கொண்டு விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை வினைத்திறனுடன் தீர்க்கும் நோக்கில் இந்த கூட்டிணைப்பு மேற்கொள்ளப்படுகிறது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.