பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு ஏற்பாடுகள்!
#SriLanka
#Lanka4
#JeevanThondaman
Kanimoli
2 years ago
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் நான்கு அமைச்சுகளின் செயலாளர்கள் இணைந்து இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் காணி உரிமை கிடைக்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.