பீடிகள் மூலம் அதிக வரி வருமானத்தை சம்பாதித்த அரசாங்கம்
#SriLanka
#prices
#Lanka4
#economy
Kanimoli
2 years ago
பீடிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் வரை 482 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், பீடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளினால் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நேற்று தெரிவித்தார்.
இந்த நாட்டில் 23 வீதமான மக்கள் பீடி குடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புறங்களில் சுமார் 4 இலட்சம் பேர் பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.