ஹவாயில் சுற்றுலாத்தளத்தை அழித்த காட்டுத்தீ - ஆறுபேர் பலி!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

ஹவாயில் உள்ள லஹைனா நகரத்தில் நேற்று (09.08) காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. குறித்த காட்டுத்தீயில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட தீ, காற்று மற்றும் வறண்ட காலநிலையின் காரணமாக வேகமாக பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தீயில் சிக்கிய சுற்றுலா தளம் முற்றாக அழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



