உயிரிழந்த சிறுவனின் சிறுநீரகங்கள் இன்னும் வைத்தியசாலையில் இருக்கின்றன!
#SriLanka
#Hospital
#Lanka4
Thamilini
2 years ago
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் மூன்று வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் நேற்று (09.08) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
குழந்தையின் அகற்றப்பட்ட சிறுநீரகம் ஒன்று வைத்தியசாலையின் உறைவிப்பான் பெட்டியில் இருப்பதாக சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, "சிறுநீரகம் இன்னும் இருப்பதாகவும், உறைவிப்பான் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.