புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
#SriLanka
#Railway
#Lanka4
Thamilini
2 years ago
பொலன்னறுவையில் புகையிரத கடவை திருத்தம் காரணமாக அந்த பகுதியின் போக்குவரத்து 03 நாட்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், பொலன்னறுவை மற்றும் மானம்பிட்டிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் மாணிக்கம் பட்டிய பாதையில் அமைந்துள்ள புகையிரத கடவைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடவை 10 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் 11 ஆம் திகதி பிற்பகல் 02.30 மணி வரை பகுதியளவிலும், 12 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் 13 ஆம் திகதி இரவு 08.30 மணி வரையிலும் முழுமையாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.