இலங்கைக்கு வருகை தந்தார் சச்சின் டெண்டுல்கர்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
உலக மனிதாபிமான முயற்சிகளுக்கான யுனிசெஃப் தூதுவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேற்று (08.07) இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அவரது விஜயம் அமைந்திருந்தது.
இதன்போது ஆளுநர் நவீன் திஸாநாயக்க மற்றும் யுனிசெஃப் பிரதிநிதிகளுடன் இணைந்து சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாலர் பாடசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
குழந்தைகளுக்கான ஆரம்பகால கல்வி மற்றும் ஆதரவை மேம்படுத்துவதற்கு வெளிநாட்டு மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து யுனிசெஃப் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.