தடையற்ற மின்சாரம்: அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
ஊடகங்களில் வெளியாவது போன்று மின் கட்டணதிற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (7) தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார விலையை திருத்த வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று அவர் தெரிவித்தார்.
ஆண்டு முழுவதும் தடையற்ற மின்சாரத்தை நாடளாவிய ரீதியில் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது கிடைக்கக்கூடிய மின் உற்பத்தி நிலையங்களின் முழு கொள்ளளவும் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.