ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை விரட்டியடித்தாக மீனவர்கள் குற்றச்சாட்டு

#SriLanka #Arrest #Fisherman #Lanka4 #Sri Lankan Army
Kanimoli
2 years ago
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை விரட்டியடித்தாக மீனவர்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 524 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். 

 நேற்று மாலை தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட அதி நவீன ரோந்து படகுகளில் சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்களை எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர். 

இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து இன்று காலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

 நடுக்கடலில் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு சுமார் 70ஆயிரம் வரை நஷ்டத்துடன் இன்று காலை மீனவர்கள் கரை திரும்பியதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!