குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து : வைத்தியர் எச்சரிக்கை!
#SriLanka
#children
#doctor
#Lanka4
Thamilini
2 years ago
தற்போது நிலவும் வறண்ட காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா, நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகளை குடிக்க கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், வறண்ட காலநிலையுடன் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் பரவக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.