மக்கள் வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!
#SriLanka
#People's Bank
#Lanka4
Thamilini
2 years ago
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக வங்கிகள் இன்றும் (05) , நாளையும் (06.08) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தெரிவு செய்யப்பட்ட சில கிளைகள் மாத்திரமே திறந்திருக்கும் எனக் மக்கள் வங்கியின் முகப்புத்தகத்தில்கூறப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிதியை பெறுவதற்கு மக்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டியதும் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் வங்கிக் கிளைகளில் மக்கள் காத்திருந்து கணக்குகளை திறந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.