படகு சேவை மத்திய நிலையமாக தலைமன்னார் இறங்கு துறை! நிமல் சிறிபால டி சில்வா
#India
#SriLanka
#Mannar
#Ship
Mayoorikka
2 years ago
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவையை ஆரம்பிப்பதற்கான மத்திய நிலையமாக தலைமன்னார் இறங்கு துறையை தெரிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் இறங்கு துறை பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் சுற்றுலா வரும் பயணிகளுக்கான வசதிளை தலைமன்னார் இறங்குதுறை பகுதியில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.