அரச மரம் தொடர்பில் வெளியான வர்த்தமானி: இதுவும் ஒரு வகையில் இன அழிப்புத்தான்! சரவணபவன்

#SriLanka #Jaffna
Mayoorikka
2 years ago
அரச மரம் தொடர்பில் வெளியான வர்த்தமானி: இதுவும் ஒரு வகையில் இன அழிப்புத்தான்! சரவணபவன்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரம் சங்கமித்தாவின் அரச மரம் என வர்ணிக்கப்பட்ட விடயம் ஆலய பரிபாலனசபையினருக்கு கூட தெரியாது வெளிவந்திருக்கும் வர்த்தமானி மீள பெறப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

 சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திற்கு நேற்று நேரில் சென்று குறித்த விடயம் தொடர்பில் ஆலய நிர்வாக சபையினருடன் நேரடியாக கலந்துரையாடி குறித்த அரச மரத்தை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

 இராணுவத்தினரால் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவித்து , பின்னர் நாங்கள் ஒருவரும் அசைய முடியாத நேரத்தில் , அவர்கள் இங்கே வருகை தந்து அளவுகள் எல்லாவற்றையும் எடுத்து , இதனைச் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது .

 பெப்ரவரி மாதம் மாதம் முதலாம் திகதி இந்த வர்த்தக மானி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயம் எங்கள் யாருக்கும் தெரியாது. நிர்வாக சபைக்கு கூட தெரியாது.

 இதன் நோக்கம் பௌத்த அடையாளங்களை இந்த யாழ் மாவட்டத்திலும், வட மாகாணத்திலும் ஏற்படுத்தி , " இது பௌத்தர்கள் வாழ்ந்த இடம்தான் " என எதிர்வரும் 10, 15 வருடங்களில் அதை நிரூபிக்கக்கூடிய ஏற்பாட்டைத்தான் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் .

 இதற்குத் துணையாக இராணுவம் , பொலிஸார், கடற்படை எல்லாப்படைகளும் ஒன்றாக சேர்ந்து நிக்கின்றன. அவர்கள் எல்லோரும் சிங்களவர்கள் தான். 99 % சிங்களவர்கள் இருக்கின்றதால் அவர்களை மீறி தமிழர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றனர். எனவே இவர்களால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தகமானி மீளப் பெறப்பட வேண்டும். 

கோவில் நிர்வாகத்துடன் எந்தவித பேச்சுக்களையும் அவர்கள் பேசவில்லை. இது கோவில் நிர்வாகம். ஒரு தனியார் கோவில். அதற்கான உறுதி, நீதிமன்றகட்டளை எல்லாம் இருக்கின்றது. அவற்றை வைத்துக்கொண்டு தாங்கள் நினைத்த படி வர்த்தகமானியில் பிரசுரித்திருக்கின்றார்கள். 

எனவே அவர்களுடைய இந்த பௌத்தமயமாக்கல் தீய நோக்கங்கள், அதாவது இலங்கை படையைச் சேர்ந்தவர்களிடமிருந்து எந்த பொதுமக்களும் விலகித்தான் நிற்போம். நாங்கள் ஒருகாலத்தில் வல்லமையுடன் தான் இருந்தோம். 

ஆனால் இப்பொழுது பலம் குன்றி இருக்கின்றோம். இந்த நிலையில் அவர்கள் எங்கள் மேல் ஏறி சவாரி செய்ய நினைக்கின்றார்கள். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து எதிர்ப்புகளை காட்ட வேண்டும். இதுவும் ஒரு வகையில் இன அழிப்புத்தான். 

எங்களுடைய கலாச்சாரம், சமயத்தில் அவர்கள் கை வைத்திருக்கின்றார்கள். இதுவும் ஒரு இன அழிப்புத்தான். எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சகல தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!