நாட்டில் புகையிலை மற்றும் கஞ்சா பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
#SriLanka
#people
#Ciggerette
#Cannabis
Prasu
2 years ago
இலங்கையில் சட்டவிரோத கஞ்சா பாவனையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் சட்டவிரோத கஞ்சா பாவனையாளர்களின் எண்ணிக்கை 300,000 இலிருந்து 350,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது நாட்டில் புகையிலை பாவனையாளர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனாக உள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தேசியமருந்துக் கொள்கையை உருவாக்குவதற்கான முக்கியமான கலந்துரையாடல் எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.