ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

#world_news #Ukraine #War
Prathees
2 years ago
ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் நேற்று ரஷ்யாவின் தலைநகரை தாக்கியதை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 அந்த தாக்குதல்களால்இ தலைநகரில் உள்ள ஒரு விமான நிலையத்தை ரஷ்யா மூட வேண்டியதாயிற்று.

 அதன்படி மீண்டும் ரஷ்யாவில் போர் வந்துவிட்டது என குறிப்பிட்ட உக்ரைன் அதிபர், இது தவிர்க்க முடியாத நியாயமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 ஆனால் நாளுக்கு நாள் உக்ரைன் வலுவடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இதற்கிடையில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கான சமாதான முன்னெடுப்புக்கான முன்மொழிவு தொடர்பான மாநாட்டிற்கு அனுசரணை வழங்க சவூதி அரேபியா தயாராகி வருகிறது.

 உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி இந்த திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால்இ மாநாடு நடைபெறும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 இதில் பல நாடுகள் பங்கேற்க உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4