நீக்கப்படவுள்ள QR முறைமை: காஞ்சன வெளியிட்டுள்ள தகவல்
#SriLanka
#Fuel
#QRcode
Mayoorikka
2 years ago
தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR முறைமை ஜனாதிபதி உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எதிர்வரும் இரண்டு மாதங்களில் குறித்த சட்டவிதிகளை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கான கியூ.ஆர். குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி 6,527,684 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.